23 பிப்ரவரி, 2010

NEWS

புதுடில்லி : வரும் மார்ச் மாதம் 31 ம் தேதிக்குள் 117 புதிய ரயில்கள் விடப்படும் என்றும்,   பயணிகள் வசதிக்காக ரூ. ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்படுகிறது என்றும் , ரயில்வே அமைச்சர் தனது பட்ஜெட்டில் தெரிவித்தார். இன்று தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட் மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்டது என பட்ஜெ‌ட் தாக்கல் செய்ய பார்லி.,க்கு வந்த ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார். மத்தியில் இரண்டாவது முறையாக பதவியேற்ற ஐ.மு., கூட்டணி அரசில், ரயில்வே அமைச்சராக உள்ள மம்தா பானர்ஜி, இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்தார்.

DAILY NEWS: NEWS

DAILY NEWS: NEWS

NEWS


'இரானில் முக்கிய தீவிரவாதி கைது'
இரானில் பல பயங்கரமான தாக்குதல்கள் நடத்தப்படக் காரணமாயிருந்த குழு என்று கூறப்படும் ஜுண்டோலா குழுவைச் சேர்ந்த, சுன்னி மதக்குழு தீவிரவாதி, அப்தொல்மலெக் ரிஜியை, தான் பிடித்துவிட்டதாக இரான் கூறுகிறது.
துபாயிலிருந்து மத்திய ஆசிய நாடொன்றுக்கு விமானம் மூலம் அவர் சென்று கொண்டிருந்த போது, அவர் பயணித்த விமானம் இரானில் இறங்குமாறு உத்தரவிடப்பட்டது என்று கூறப்படுகிறது.
தொலைக்காட்சிப் படங்கள், முகமூடியணிந்த பாதுகாப்புப்படையினரால், அவர் ஒரு விமானத்திலிருந்து கூட்டிச்செல்லப்படுவதைக் காட்டின.
இந்தக் கைது, ஜுண்டோல்லாவை ஆதரிப்பதாக இரான் குற்றம்சாட்டும், அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் ஒரு பெரியதோல்வி என்று இரான் கூறுகிறது.
இரு நாடுகளுமே இந்த குற்றச்சாட்டை மறுக்கின்றன. பிரிட்டன், இந்தத் தீவிரவாதியின் கைது, பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு பெரிய அடி என்று வர்ணித்து வரவேற்றிருக்கிறது.